ETV Bharat / state

சாதனைகளை கூறி ஓட்டு கேளுங்கள் - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Feb 15, 2022, 1:33 PM IST

யாரைப் பற்றியும் குறை கூறாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

பக்குவமாக ஓட்டு கேளுங்கள் - வேட்பாளர்களுக்கு கே டி ஆர் அறிவுரை
பக்குவமாக ஓட்டு கேளுங்கள் - வேட்பாளர்களுக்கு கே டி ஆர் அறிவுரை

விருதுநகர்:சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது,

“தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் முக்கியமான களப்பணிகளை இன்றிலிருந்து ஆற்ற வேண்டியுள்ளது. தொழில் அதிபர்களை கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. தொழிலாளர்கள் பாட்டாளிகள் உழைப்பாளிகளை நம்பி மட்டுமே அதிமுக எம்ஜிஆரால் துவங்கப்பட்டுள்ளது.

சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்கக்கூடிய தொண்டர்களை கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஆட்சியில் இல்லை அதிகாரத்தில் இல்லை என்ற எண்ணம் இல்லாமல் சீட்டுக்காக போட்டிப் போடக்கூடிய இயக்கம் அதிமுக. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தெம்புடனும் ,திராணியுடன் இருக்கிறது.

அதிமுக சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேளுங்கள்

அதிமுக அற்புதமான கட்சி!

ஒரு அற்புதமான இயக்கத்தை ஓபிஎஸ் இபிஎஸ் கட்டமைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் வழியில் நான் பயணித்து வருகிறேன். அனைத்து வேட்பாளர்களும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகலாம் என எண்ணுங்கள்

மக்கள் அனைவருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எண்ணம் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக அலை வீசுகிறது. அதிமுக வெல்வது நிச்சயம் மாநகராட்சியை வெல்வது நிச்சயம்.ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டும் தான் மாநகராட்சிகளுக்குப் பணம் மட்டும் பதவிகள் கிடைக்கும் என்ற எண்ணம் தவறானது. மத்திய அரசின் மூலம் பல கோடி வரும்.

எண்ணற்ற பணிகள்

சிவகாசியில் மாநகர சாலைப் பணிகள், புதிய பேருந்து நிலையம் என அனைத்தையும் செய்தது இந்த ராஜேந்திர பாலாஜி மட்டுமே!

கரோனா பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் சில பணிகள் தொடங்கப்படவில்லை. இதை ஒரு சிலர் கையில் எடுத்துக் கொண்டதால் நமக்கு சரிவு ஏற்பட்டது.

சாதனைகளை் கூறி ஓட்டு கேளுங்கள்

மாநகராட்சி கட்டிடம் மண்டலங்கள் கட்டிடம் என அனைத்தும் அதிமுக கட்டிக் கொடுத்தது . திருத்தங்கல் என்றாலே தண்ணீர் பிரச்சனை இருக்கும். அதனால் பெண் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

அனைத்து வேட்பாளர்களும் பக்குவமாக ஓட்டு கேளுங்கள். மற்றவர்களைக் குறை சொல்லி ஓட்டு கேட்பதால் நமக்கு அது பாதகம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு கேளுங்கள்.

இதையும் படிங்க:'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'

விருதுநகர்:சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது,

“தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் முக்கியமான களப்பணிகளை இன்றிலிருந்து ஆற்ற வேண்டியுள்ளது. தொழில் அதிபர்களை கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை. தொழிலாளர்கள் பாட்டாளிகள் உழைப்பாளிகளை நம்பி மட்டுமே அதிமுக எம்ஜிஆரால் துவங்கப்பட்டுள்ளது.

சோதனைகள் வரும் போதெல்லாம் சாதனைகள் கிடைக்கக்கூடிய தொண்டர்களை கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. ஆட்சியில் இல்லை அதிகாரத்தில் இல்லை என்ற எண்ணம் இல்லாமல் சீட்டுக்காக போட்டிப் போடக்கூடிய இயக்கம் அதிமுக. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தெம்புடனும் ,திராணியுடன் இருக்கிறது.

அதிமுக சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேளுங்கள்

அதிமுக அற்புதமான கட்சி!

ஒரு அற்புதமான இயக்கத்தை ஓபிஎஸ் இபிஎஸ் கட்டமைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சொல்லும் வழியில் நான் பயணித்து வருகிறேன். அனைத்து வேட்பாளர்களும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகலாம் என எண்ணுங்கள்

மக்கள் அனைவருக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கும் எண்ணம் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக அலை வீசுகிறது. அதிமுக வெல்வது நிச்சயம் மாநகராட்சியை வெல்வது நிச்சயம்.ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் மட்டும் தான் மாநகராட்சிகளுக்குப் பணம் மட்டும் பதவிகள் கிடைக்கும் என்ற எண்ணம் தவறானது. மத்திய அரசின் மூலம் பல கோடி வரும்.

எண்ணற்ற பணிகள்

சிவகாசியில் மாநகர சாலைப் பணிகள், புதிய பேருந்து நிலையம் என அனைத்தையும் செய்தது இந்த ராஜேந்திர பாலாஜி மட்டுமே!

கரோனா பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் சில பணிகள் தொடங்கப்படவில்லை. இதை ஒரு சிலர் கையில் எடுத்துக் கொண்டதால் நமக்கு சரிவு ஏற்பட்டது.

சாதனைகளை் கூறி ஓட்டு கேளுங்கள்

மாநகராட்சி கட்டிடம் மண்டலங்கள் கட்டிடம் என அனைத்தும் அதிமுக கட்டிக் கொடுத்தது . திருத்தங்கல் என்றாலே தண்ணீர் பிரச்சனை இருக்கும். அதனால் பெண் கொடுக்க தயங்குவார்கள். ஆனால் தற்போது அனைத்து பகுதியிலும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்துள்ளோம்.

அனைத்து வேட்பாளர்களும் பக்குவமாக ஓட்டு கேளுங்கள். மற்றவர்களைக் குறை சொல்லி ஓட்டு கேட்பதால் நமக்கு அது பாதகம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் நான். யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் அதிமுக சாதனைகளை மட்டுமே கூறி வாக்கு கேளுங்கள்.

இதையும் படிங்க:'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.